ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இது தொடர்பில் தனது பேஸ்புகில் பதிவிட்டுள்ள அவர்,
எனக்கும் என் மனைவிக்கும் கொவிட்- 19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் என்னைச் சந்தித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.