உப்பேனா தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்யின் மகன் ஜேசனும், விஜய் சேதுபதியின் ரீல் மகளான க்ரித்தி ஷெட்டியும் சேர்ந்து புதுமுகம் புச்சிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ், க்ரித்தி ஷெட்டி சேர்ந்து நடித்த உப்பேனா தெலுங்கு படம் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. ரூ. 22 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ரூ. 100 கோடி வசூல் செய்தது.
உப்பேனா படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விஜய் சேதுபதி வாங்கியிருக்கிறார் என்றும், அதில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை ஹீரோவாக நடிக்க வைக்க விரும்புகிறார் என்றும் தகவல் வெளியானது.
மாஸ்டர் படப்பிடிப்பின்போது உப்பேனா ரீமேக் குறித்து விஜய்யிடம் விஜய் சேதுபதி தெரிவிக்க அவரும் ஓகே சொன்னதாக கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
க்ரித்தி ஷெட்டி தற்போது மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் உப்பேனாவை ஜேசன் சஞ்சய் மற்றும் க்ரித்தி ஷெட்டியை வைத்து ரீமேக் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் விஜய்யின் மகனுக்கோ கேமராவுக்கு முன்னால் இருப்பதை விட பின்னால் இருக்கவே விருப்பமாம்.
தன் அப்பாவை வைத்து படம் இயக்க விரும்புகிறாராம் ஜேசன். ஆனால் அதற்கு முன்பு பிற இயக்குநர்களிடம் உதவியாளராக வேலை செய்து அனுபவசாலியான பிறகே விஜய்யை இயக்குவாராம்.
அவரை கேமராவுக்கு பின்னால் அல்ல மாறாக முன்னால் பார்க்க விஜய் ரசிகர்கள் விரும்புகிறார்கள். ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.