ilakkiyainfo

யாழிலும் பட்டொளிவீசிப் பறக்கிறது’சீனக்கொடி’தெரியாதென்கிறது அரசு!

யாழ்ப்பாணத்தில் சீன நாட்டின் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளமை தொடர்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உள்ள சீன கட்டுமான நிறுவனம் ஒன்றில் சீனாவின் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளமை தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன.

யாழ்ப்பாணத்தில் சீனக்கொடி ஏற்றப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழிலும் பட்டொளி வீசிப் பறக்கிறது ‘சீனக்கொடி’

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் சீனக் கொடி ஏற்றப்பட்டது தொடர்பில் அப்பகுதி உள்ளூராட்சி நிர்வாகமே அதனைக் கண்காணிக்க வேண்டும் . அந்த நிறுவனத்தில் ஏதாவது நிகழ்வுகள் இடம்பெற்றதா, உள்ளூராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டதா என்பன தொடர்பில் உள்ளூராட்சி நிர்வாகமே கவனிக்க வேண்டும்.

பொதுவாக ஒரு நாட்டிற்குள் செயற்படும் நிறுவனங்கள் தங்கள் நாட்டு கொடியை ஏற்றுவது இல்லை. இந்த சம்பவம் தொடர்பில் எமக்கு தகவல் கிடைக்கவில்லை. எங்களுக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன.

Exit mobile version