Site icon ilakkiyainfo

துமிந்த சில்வாவிற்கும் பொது மன்னிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

இன்றைய தினம் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட 94 பேரில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
துமிந்த சில்வா

கொழும்பு புறநகர் பகுதியான முல்லேரியா பகுதியில் 2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் தேதி இருதரப்பிற்கு இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் உயிரிழந்திருந்தனர்.

இந்த பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தார்.

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலையுடன், துமிந்த சில்வாவிற்கு நேரடி தொடர்பு உள்ளதாக தெரிவித்து, துமிந்த சில்வா கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு, 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08ம் தேதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த பல வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த துமிந்த சில்வாவிற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

Exit mobile version