மட்டக்களப்பு – செங்கலடி கறுத்தபாலத்திற்கருகில் இராணுவ ட்ரக் வண்டியொன்று இன்று (25) மாலை விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
செங்கலடி – பதுளை வீதியின் கருத்தப்பாலம் அருகே பயணித்த இராணுவ ட்ரக் வண்டியொன்று, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வாகரை இராணுவ முகாமுக்கு சொந்தமான ட்ரக் வண்டியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த இராணுவ வீரர்களின் சடலங்கள், பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
காயமடைந்தவர்களில் நால்வர், செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.