யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்கள் இருவர், வெள்ளிக்கிழமை (25) உயிரிழந்துள்ளனர்.
காரைநகரைச் சேர்ந்த 62 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரும் மன்னாரைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவருமே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இருவரினதும் சடலங்களும், உரிய சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மின்தகனம் செய்யப்பட்டன.