Site icon ilakkiyainfo

ரூ.5 கோடியில் இருந்து ரூ. 10 கோடி: சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்திய நயன்தாரா?

நயன்தாரா தன் சம்பளத்தை ரூ. 5 கோடியில் இருந்து ரூ. 10 கோடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. நெற்றிக்கண் படத்தை விற்பனை செய்த பிறகு இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறாராம்.

தென்னிந்திய திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. அவர் படம் ஒன்று ரூ. 4 முதல் 5 கோடி சம்பளம் வாங்குகிறார்.

அவர் படங்களில் நடிப்பதுடன் தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தை துவங்கி தயாரிக்கவும் செய்கிறார்.

மேலும் நல்ல படங்களை வாங்கி வெளியிடவும் செய்கிறார். ரௌடி பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில், மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா பார்வையற்றவராக நடித்திருக்கும் நெற்றிக்கண் படத்தின் பட்ஜெட் ரூ. 8 கோடி. அந்த படத்தை ரூ. 25 கோடிக்கு ஓடிடி நிறுவனம் ஒன்றிடம் விற்றுவிட்டார்களாம்.

நெற்றிக்கண் அதிக விலைக்கு போனதை பார்த்த நயன்தாரா தன் சம்பளத்தை உயர்த்த இதுவே சரியான நேரம் என்று முடிவு செய்திருக்கிறாராம். இதையடுத்து இனி ரூ. 10 கோடி சம்பளம் வாங்குவது என்று இருக்கிறாராம்.

நயன்தாரா தற்போது கொச்சியில் இருக்கிறார். பிரேமம் படம் புகழ் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் பாட்டு மலையாள படத்தில் நடிக்க வசதியாக அங்கு தங்கியிருக்கிறார்.

இது தவிர்த்து சிறுத்தை சிவா இயக்கி வரும் அண்ணாத்த படத்தில் நயன்தாரா, மீனா தொடர்பான காட்சிகளை கொல்கத்தாவில் படமாக்க வேண்டியிருக்கிறது.

மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார்.

அந்த படத்தை அக்டோபர் மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி தான் ஹீரோ. சமந்தா இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார்.

இதற்கிடையே அட்லி இயக்கும் பாலிவுட் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

Exit mobile version