பன்விலையில் சுமார் 10 அடி நீளமான மலைப்பாம்பொன்றை அப்பிரதேச இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
”தாம் விளையாடச் சென்றபோது மானொன்றின் சத்தத்தை கேட்டு அப்பகுதிக்குச் சென்றதாகவும், இதன் போது அம்மலைப்பாம்பானது மானொன்றை கௌவிப் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் ” குறித்த இளைஞர்கள் தெரிவித்தனர்.
மேலும் பாம்பிடமிருந்து மானை மீட்ட இளைஞர்கள் அப்பாம்பை பொலிஸாரின் அறிவுரைக்கிணங்க ஆத்தளை பகுதியில் அமைந்துள்ள காட்டில் விடுவித்துள்ளதாகத் தெரிவித்தனர்.