நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று மின்னலில் சிக்கிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்.
அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணானம் வேவர்லி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த ஜூன் 25ம் தேதி வாகனங்கள் வேகமாக சென்று கொண்டிருந்தன.
அப்பொழுது வானம் இடி – மின்னல் மழையுடன் இருந்தது. அப்பொழுது அந்த வழியாக கருப்பு நிற கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அதில் கணவன் மனைவி குழந்தைகள் என மொத்தம் 5 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர்களது காரை மின்னல் ஒன்று தாக்கியது. அதிர்ஷ்டவசமாக கார்கள் எல்லாம் மின்னல் தாக்கினால் உள்ளே உள்ள யாருக்கும் ஆபத்து ஏற்படாத வாறு டிசைன் செய்யப்பட்டுள்ளதால் உள்ள இருந்த யாருக்கும் எதுவும் ஆகவில்லை.
இதானல் காருக்குள்ளே இருந்த கணவன் மனைவி, 1.5 வயது குழந்தை, 8 மாத குழந்தை உட்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
இந்த சம்பவம் பின்னால் வந்த காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.