Site icon ilakkiyainfo

யாழ்.கோண்டாவிலில் கொடுத்த கடனை கேட்கச் சென்றவர் மீது வாள் வெட்டு

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் கொடுத்த கடனை கேட்கச் சென்றவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.

கடனை கேட்கச் சென்றவர் மீது, தந்தையும் மகனும் இணைந்து அவரின் தலை மற்றும் கழுத்தில் வாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மோகனராஜா ரஜீவன் (வயது-37) என்பவரே படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து தாக்குதல் நடத்திய இருவரும் கைது செய்யப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version