இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,66,499 ஆக உயர்வு
நாட்டில் மேலும் 869 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,66,499 ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 53 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை கொரோனா தொற்றால் இதுவரை குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 34 ஆயிரத்து 942 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில், தற்போது 28 ஆயிரத்து 321 பேர் வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 947 பேர் வைத்திய கண் காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆக உயர்ந்துள்ளது