இவற்றுக்கு ஏமாறுவதற்கு நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,
தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராகும் பசில் ராஜபக்ஷ குறித்து பல்வேறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
முதல் முதலாக பாராளுமன்றத்திற்கு வருவது போலவும் இதற்கு முன்னர் எவ்வித அமைச்சு பதவிகளையும் வகிக்காதவர் போலவுமே அரசாங்கத்தின் பிரசாரங்கள் காணப்படுகின்றன.
அலாவுதீனின் மந்திர விளக்குடனா பஷில் வருகிறார் என்ற கேள்வியையே நாங்கள் கேட்க விரும்புகின்றோம். மந்திர விளக்கின் ஊடாக எரிப்பொருள் விலை குறைக்கவும் , பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட எமது கடல் வளத்தை பசுமையாக்கவும் , உரமின்றி போராட்டங்களை நடத்தும் விவசாகளின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பாரா? அல்லது அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளை குறைப்பாரா?
அரசாங்கம் அடைந்துள்ள தோல்விக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் மாத்திரம் பொறுப்பள்ள , மாறாக பசில் ராஜபக்ஷவும் பொறுப்பு கூற வேண்டும் என்று ஆளும் கட்சியின் அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறுகின்றார்.
அமெரிக்கவை தாய் நாடாக கொண்டுள்ள பசில் ராஜபக்ஷவினால் நாட்டிற்கு எதுவும் செய்து விட முடியாது. போலி மாயைகளை கண்டு ஏமாறுவதற்கு நாட்டு மக்கள் முட்டாள்களும் இல்லை எனவும் தெரிவித்தார்.
</di