யாழ். மாவட்டத்தில் தொற்றாளர்களது எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்து வருகின்ற போதிலும் நாளாந்த உயிரிழப்புகள் தொடர்ச்சியாக பதிவாகும் நிலை நீடித்து வருகிறது.

யாழ். மாவட்ட கொவிட்-19 புள்ளிவிபர அறிக்கையின் அடிப்படையில் இவ்விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஜூலை 01 முதல் ஜூலை 07 வரையான ஒரு வாரத்தில் மட்டும் இவ்வாறு 12 கொவிட்-19 மரணங்கள் யாழ். மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளன.

ஜூலை  மாதம் முதலாம் திகதி 4 மரணங்கள் ,ஜூலை – 02 – 2 மரணங்கள்,

ஜூலை – 04 – ஒரு மரணம்,ஜூலை – 05 – ஒரு மரணம், ஜூலை – 06 – 3 மரணங்கள்,ஜூலை – 07 – ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

யாழ். மாவட்டத்தில் ஜூலை-07 வரையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.

யாழ். மாவட்டதிதில் இதுவரை ஏற்பட்ட கொவிட்-19 மரணங்கள் தொடர்பான விபரம்,மொத்த உயிரிழப்பு பிரதேச செயலர் பிரிவு வாரியாக யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் – 33 பேர்,கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் – 12 பேர்,நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் – 12 பேர்,உடுவில் பிரதேச செயலர் பிரிவில் – 09 பேர்,சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் – 08 பேர்,பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் – 08 பேர்,சங்கானை பிரதேச செயலர் பிரிவில் – 08 பேர்,தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் – 05 பேர்,கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் – 03 பேர்,சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் – 03 பேர்,வேலணை பிரதேச செயலர் பிரிவில் – 03 பேர்,காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் – 02 பேர்,ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் – ஒருவர்.பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.