உலகினை பௌதீக பண்பாட்டு அடிப்படையில் பிராந்திய ரீதியாக வகைப்படுத்துவார்கள். இந்த வகையில் ஆசிய நாடுகளினை தூரக்கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, தென்மேற்காசியா, தென்னாசியா என 4 வகையாக பாகுபடுத்தி கொள்ளலாம்.
வடக்கே இமயமலையும் அதனோடிணைந்த மலைத்தொடர்களையும் எல்லை சுவர்களினையும் கொண்டு தென்னாசியா காணப்படுகின்றது.
இன்றைய உலகில் சர்வதேசத்தினை பெரிதும் கவர்ந்துள்ள பிராந்தியமாக தென்னாசியா காணப்படுகின்ற்து.
இப்பிராந்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவு ஆகிய 7 நாடுகள் உள்ளடக்கப்படுகின்றன.
தென்னாசியா வட அகலக்கோடு 3 பாகை தொடக்கம் 37 பாகைக்கும், 58 பாகை தொடக்கம், 95 பாகை வரையிலான கிழக்கு நெடுங்கோடுக்கும் இடையில் பரந்து காணப்படுவதுடன் 4489240 சதுர பரப்பளவையும் கொண்டுள்ளது.
இப்பிராந்தியம் உலக நிலப்பரப்பில் 3.8% மட்டுமே கொண்டிருந்த போதிலும் உலக குடித்தொகையில் 21% சதவீதத்தினை கொண்டு மக்கள் அடர்த்தியாக வாழும் பிரதேசமாக காணப்படுகின்ற்து.
தென்னாசிய நாடுகளின் நிலப்பரப்பினை அவதானிக்குமிடத்து இந்தியா 3287590 சதுரகிலோமீட்டர் ஆகவும், பாகிஸ்தான் 803940 சதுரகிலோமீட்டர் ஆகவும், பங்களாதேஷ் 144000 சதுரகிலோமீட்டர் ஆகவும், நேபாளம் 140800 சதுரகிலோமீட்டர் ஆகவும், இலங்கை 65610 சதுரகிலோமீட்டர் ஆகவும், பூட்டான் 47000 சதுரகிலோமீட்டர் ஆகவும், மலைத்தீவு 489240 சதுரகிலோமீட்டர் ஆகவும் காணப்படுகின்றது.
”தென்னாசியாவின் முழுவிபரங்களையும் அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்”