Site icon ilakkiyainfo

’குடிபோதையில் மதிகெட்ட தந்தை’

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே திருமணம் ஆக விருந்த நிலையில் மணமகனை தந்தையே கோடாறியால் வெட்டிக்கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதால் கொலை செய்ததாக தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.

தனது தந்தை இளங்கோவனுக்கும் வாலிபர் பிரதீப்புக்கும் சொத்து தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது.

பிரதீப் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் தனது உறவுக்கார 17 வயது சிறுமிமை அழைத்துச் சென்று திருமணம் செய்ததால் சிறுமியை திருமணம் செய்ததாக போக்சோ வழக்கில் வாலிபர் பிரதீப் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வாலிபர் பிரதீப் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரதீப்புக்கும் அதே சிறுமிக்கும் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் நேற்று மணமகன் வீட்டில் திருமணம் நடாத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

குடிபோதையில் தந்தை மகனுக்கும் தகராறு முற்றியதால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் மணமகன் பிரதீப் வீட்டில் பிணமாக கிடந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார் கூறுகையில். மணமகன் பிரதீப் குடிபோதையில் தந்தை இளங்கோவனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது. இதனால் அருகிலிருந்த கோடாரியால் தந்தை தனது மகன் என்றும் பாராமல் பிரதீப்பை கோடாறியால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார்.

பின்னர் இளங்கோவன் நேராக வாடிப்பட்டிபொலிஸில் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

அடிக்கடி குடிபோதையில் தந்தையிடன் தகராறில் ஈடுபட்டதால் மகனுக்கு திருமணம் ஆக இருந்த நிலையில் தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

Exit mobile version