தமிழ் சினிமாவில் கடந்த 80களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
80களில் தமிழ் சினிமாவில் நாயகிகளாக வலம் வந்து கொண்டிருந்த நடிகைகள் தற்போது ஒன்று கூடி மகிழ்ச்சியாக வார இறுதியை கழித்ததாக நடிகை ராதிகா சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வார இறுதியில் 80களின் தோழிகளுடன் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் ஏகப்பட்ட மலரும் நினைவுகள் மற்றும் சந்தோசங்கள் என்றும் ராதிகா சரத்குமார் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் அம்பிகா, ராதா, சுகாசினி, குஷ்பு, பூர்ணிமா ஜெயராமன் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் உள்ளனர்.