Site icon ilakkiyainfo

ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் ஆணொருவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான முறிகண்டி செல்வபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

154ம் கட்டை ஏ9 வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டின் உரிமையாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் 61 வயதுடைய குஞ்சுமோகன் அசோகன் என்ற குடும்பத்தர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசுவது தொடர்பில் அயலவர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலிற்கு அமைவாக பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலமாக அடையாளம்காணப்பட்டவரின் மனைவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பிள்ளைகள் தொழிலின் நிமித்த வேறுபிரதேசத்தில் வாழ்ந்து வரும் நிலையில் சம்பவம் இடம்பெற்றள்ளது.

ஆயினும் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார் பல்கோண விசாரணைகளை மேற்கொண்டு வருகின்னறனர்.

சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்ற வரும் நிலயைில், நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் வைத்தியசாலைக்க எடுத்து செல்லப்படவுள்ளது.

Exit mobile version