பீகார் மாநிலம் சவ்ரசியா கிராமத்தை சேர்ந்தவர் ராதா தேவி இவர ஒரு ஆண் ஆட்டை வளர்த்து வந்துள்ளார்.
விவசாய பணி பார்க்கும் இவர் பணிக்கு செல்லும் போது அந்த ஆட்டை கூட்டி செல்வார், முடித்துவிட்டு திரும்ப வரும் போது அழைத்து வருவார்.
அதுவரை அந்த ஆடு தனக்கு தேவையான உணவுகளை அப்பகுதியில் சாப்பிடுக்கொள்ளும். அதே பகுதியை சேர்ந்த சிப்புராம் என்பவர் பெண் ஆடு ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அவரும் இதே போலவே ஆட்டை வளர்த்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராதா தேவி வளர்த்த ஆண் ஆடு சிப்புராம் வளர்த்த பெண் ஆட்டுடன் சேர்ந்துள்ளது.
இதை பார்த்த சிப்புராம் கடுப்பாகி தன் கையில் வைத்திருந்த கம்பை வைத்து ஆண் ஆட்டை அடிக்க துவங்கிவிட்டார்.
இதை பார்த்த யாரோ ஒருவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தன ராதாதேவியிடம் கூறியுள்ளனர்.
ராதாதேவி சம்பவ இடத்திற்கு வந்த போது சிப்புராம் அடித்தில் அவரது ஆண் ஆடு இறந்து கிடந்தது. சிப்புராம் கையில் கம்புடன் வெறியுடன் இருந்துள்ளார்.
இதையடுத்த தன் ஆன் ஆட்டை அடித்தே கொன்று விட்டதாக ராதா தேவி, சிப்புராம் மீது மிருகவதை சட்டத்தின்படி புகார் அளித்தார்.
இதையடுத்து இறந்து போன ஆட்டை பிரேத பரிசோதனை செய்ய கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றள்ளனர்.
இந்த அறிக்கை வந்த பின்பு தான் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க முடியும் என போலீசார் கூறியுள்ளனர்.
இதே போல கடந்த 2019ம் ஆண்டு பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் சேவலை கொன்றதாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.