கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம்(19.07.2021) கொரோனா தொற்றாளர்கள் 29 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், நேற்றையதினம் மாத்திரம் 29 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இவர்களில் 17 பேர் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.
தொற்றாளர்களில், ஏனையோர் முழங்காவில், பரவிபாஞ்சான், கனகபுரம், மருதநகர், பூநகரி உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதோடு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற காலியைச் சேர்ந்த தாதி ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு சில நாட்களில் மாத்திரம் 80 பேருக்கு மேற்பட்டோர், கொரோனா தொற்றாளர்களாக மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.