நாடு முழுவதும் ஆகஸ்ட் 16 ஆம் திகதி இரவு 10 மணிமுதல் அதிகாலை 4.00 மணிவரை அன்றாடம் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.
மறு அறிவித்தல் வரை ஆறு மணிநேர ஊடரங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என்று கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந் நேரத்தில் அத்தியாபசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.