ஆப்கானிஸ்தான் தலைநகரை விட்டு காபூல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் நுழைய முயன்றதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தில் இன்று நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.
விமானங்களில் ஏறுவதற்காக ஒரே நேரத்தில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு கூடியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
இதையடுத்து, காபூல் விமான நிலையத்தில் இருந்த படையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக முதலில் தகவல் வெளியானது. தொடர்ந்து காபூல் விமான நிலையம் மூடப்பட்டது.
Video: People run on tarmac of Kabul international airport as a US military aircraft attempts to take off. pic.twitter.com/9qA36HS0WQ
— TOLOnews (@TOLOnews) August 16, 2021
எனினும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனரா அல்லது நெரிசலில் சிக்கி உயிரிழந்தனரா? என்ற விவரம் தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட தாலிபன்களின் ஆளுகையில் இருந்து வெளியேறும் நோக்குடன் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் தொடர்ந்து முற்றுகையிட்டிருக்கிறார்கள்.
யாரையும் கொல்ல மாட்டோம், தாக்க மாட்டோம், யாருடைய உரிமையையும் பறிக்க மாட்டோம் – ஆனால், இஸ்லாமிய முறையிலான ஆட்சியை வழங்குவோம் என்று தாலிபன்களின் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், பாரம்பரிய முறையிலான ஆட்சி என்பது பெண்களுக்கு கல்வி மறுப்பது, நவீன ஆடைகளை தவிர்ப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் சார்ந்தது. இந்த இருபத்து இரண்டு ஆண்டுகளில் தாலிபன்கள் இல்லாத ஆளுகை, 20 வயதில் இருக்கக் கூடிய ஆப்கானிஸ்தானின் இளம் தலைமுறையினருக்கு புதிய அனுபவமாக இருந்திருக்கும்.