மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்குடா பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செங்கலடி – பதுளை பிரதான வீதியூடாக துவிச்சக்கரவண்டியில் பயணித்தவரை காட்டு யானை தாக்கியுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் இன்று (21) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் தம்பானம்வெளி கொடுவாமடு கிராமத்தைச் சேர்ந்த 44 வயதான குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.