Site icon ilakkiyainfo

பல்கலைக் கழகத்தில் நடந்த முதலிரவு: வீடியோவால் ஷாக்கான அதிகாரிகள்!

ஆந்திராவில் பிரபலமானது ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக் கழகம். காக்கிநாடாவில் அமைந்துள்ள இந்த பல்கலைக் கழகத்தில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்தப் பல்கலைக் கழகத்திலேயே விருந்தினர் மாளிகை அமைந்துள்ளது. அங்கு சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்குள்ள அறை முதலிரவுக்காக கட்டிலில் பூக்களுடன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரித்த போதுதான் உண்மை நிலவரம் தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் உள்ள இரண்டு அறைகள் ஊழியர்களால் வாடகைக்கு விடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 18, 19 ஆகிய இரு நாள்களுக்கு புதுமணத் தம்பதிகள் வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒரு அறையில் புதுமணத் தம்பதி முதலிரவை கொண்டாட மற்றொரு அறையில் உறவினர்கள் தங்கியுள்ளனர்.

பிரபலமான பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை விசாரிக்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version