முதலிரவு நடப்பதற்கு முன்பே அப்பார்ட்மெண்டில் சிலர் ரகசிய கேமரா பொருத்தியுள்ளனர். முதலிரவு நடந்தபின்னர் ரகசிய கேமராவில் இருந்து வீடியோ காப்பி செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சி கடவந்தறா பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஸத்தார். பிசினஸ் செய்து வருகிறார்.
இவர் திருமணத்துக்காக பெண் தேடிக்கொண்டிருந்தார். இவருக்கு திருமண தரகர் மூலம் காசர்கோடு நாயன்மார்மூலை பகுதியைச் சேர்ந்த ஸாஜிதா(30) என்ற பெண் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
ஸாஜிதாவின் பெற்றோர் எனக் கூறிக்கொண்டு என்.ஏ.உம்மர்(41) அவரின் மனைவி பாத்திமா(35) ஆகியோர் அப்துல் ஸத்தரிடம் திருமணம் குறித்து பேசினர். தொடர்ந்து அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நிச்சயிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி அப்துல் ஸத்தாருக்கும் ஸாஜிதாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் இருவரையும் தங்க வைப்பதற்காக கொவ்வல்பள்ளியில் வாடகைக்கு அப்பார்ட்மென்ட் எடுத்தனர். அங்கு வைத்து அப்துல் ஸத்தாருக்கும் ஸாஜிதாவுக்கும் முதலிரவு நடந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள்
அவர்களது முதலிரவு நடப்பதற்கு முன்பே அப்பார்ட்மென்டில் ரகசிய கேமரா பொருத்தியுள்ளனர்.
முதலிரவு நடந்தபின்னர் ரகசிய கேமராவில் இருந்து வீடியோவை காப்பி செய்துள்ளனர். அந்த வீடியோவை இக்பால் என்பவர் அப்துல் ஸத்தரிடம் காட்டி இதை நாங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டி பணம் மற்றும் நகை ஆகியவற்றை கேட்டுள்ளனர்.
அவரும் முதலில் 3.75 லட்சம் ரூபாய், ஏழரை பவுன் தங்க நகை ஆகியவற்றை கொடுத்திருக்கிறார்.
அவர்கள் பணம் மற்றும் நகை வேண்டும் என தொடர்ச்சியாக மிரட்டியதால் இதுகுறித்து அப்துல் ஸத்தார் காஞ்ஞங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீஸார் விசாரணை நடத்தியதில் இந்த திருமணமே போலி திருமணம் என தெரியவந்தது. இதையடுத்து அப்துல் ஸத்தாரை திருமணம் செய்த ஸாஜிதா, அவரது பெற்றோர் எனக்கூறிய என்.ஏ.உம்மர், பாத்திமா, வீடியோவை காட்டி மிரட்டிய இக்பால் ஆகியோரை போலீஸார் கைது
ஸாஜிதா
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “என்.ஏ.உம்மர் பாத்திமா ஆகியோர் கணவன் மனைவிதான்.
ஆனால் அவர்கள் ஸாஜிதாவின் பெற்றோர் அல்ல. என்.ஏ.உம்மர் உள்ளிட்டோர் ஸாஜிதாவை போலியாக திருமணம் செய்து வைத்து அவர்களின் முதலிரவு நடக்கும் அறையிலும் ரகசிய கேமரா பொருத்தியுள்ளனர்.
பின்னர் அந்த வீடியோவைக் காட்டி அப்துல் ஸத்தாரை மிரட்டியுள்ளனர். ஸாஜிதா இதுபோன்று ஏற்கனவே கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் திருமண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வழக்கு உள்ளது” என்றனர்.