கொழும்பின் புறநகர்ப் பகுதியான கிரிபத்கொடை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் பொற்றோர் உயிரிழந்த நிலையில், 5 வயது குழந்தை நிர்க்கதியாகியுள்ள பரிதாபமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் தந்தை கிரிபத்கொடை தனியார் கல்வி நிறுவனத்தில் பணியாற்றிவந்த 36 வயதுடைய விரிவுரையாளரான தனஞ்சய அனுருத்த என்பது தெரியவந்துள்ளது.
இவர் கடந்த 22 ஆம் திகதி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவரது மனைவி அஞ்சலி பெரேராவும் நேற்று (25) காலை கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்.
இந்நிலையில், தனஞ்சய அனுருத்தவின் இறுதி சடங்குகள் பியாகமவில் நடைபெற்றது. இதேவேளை அவரது மனைவியின் இறுதி சடங்குகள் இன்று இடம் பெற்றவுள்ளது.