இலங்கையில் இருந்து இரண்டு படகுகளில் 12 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்றும், புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், இதனால் கேரள, கர்நாடக மாநில கரையோரங்களில் பாதுகாப்பு
அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.
போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல்களுடன் பாகிஸ்தானுக்கு
நேரடித் தொடர்பு உள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியுடன் இதற்கு தொடர்
புகள் இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், இந்திய ஊடகங்
களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
‘இங்கு விடுதலைப் புலிகளின் மீள் எழுச்’ சிக்கு உதவினார்கள் என்று இந்திய ஊடகங்
களால் சுட்டிக்காட்டப்படும் ஆறு பேரும் தமிழர்கள் இல்லை, சிங்களவர்கள் என்பது
தான் விந்தையான விடயம்.
…………………………………………………………………………………
சூமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், ஈழத்தமிழர் பிரச்
சினையில் தமிழக அரசின் ஆதரவும், அக்கறையும், அதிகளவில் வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலத்தில் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழகத்தில் ஏற்படத் தொடங்கிய மாற்றம், அவரது மறைவுக்குப் பின்னர் சற்று தொய்வைச் சந்தித்திருந்தாலும், தற்போது வெளிப்படையான நகர்வுகள் பல தென்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் அல்ல என்றும், அவர்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்றும் சட்டமன்றத்தில் கூறியிருந்த முதல்வர்
ஸ்டாலின், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்காக 317 கோடி இந்திய ரூபா பெறுமதியான நலத் திட்டங்க.ளையும் அறிவித்திருக்கிறார்.
அத்துடன் அகதிகள் முகாம் என்பதையும் ‘புனர்வாழ்வு முகாம்‘ என மாற்று
மாறும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.
முகாம்களுக்கு வெளியே வசிக்கின்ற இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள்,
குடியுரிமை விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கண்டறிவ
தற்கான குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்புகள், உலகெங்கும் வாழுகின்ற தமிழ் மக்கள் மத்தியில்
பெரும் ஈர்ப்பை பெற்றிருக்கிறது.
தமிழ்த் தலைவர்கள் மாத்திரமன்றி, அரசாங்கத்தின் அமைச்சர்களான நாமல்
ராஜபக் ஷ போன்றவர்களே அதனை வரவேற்று கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
இறுதிப் போர்க்காலத்தில் தி.மு.க.வின் செயற்பாடுகள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்ததுடன், அதுதொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகியிருந்தது.
அதிலிருந்து வெளியேறி ஒரு புதிய அடையாளத்தை நட்புறவை உரு
வாக்கும் வகையில், மு.க.ஸ்டாலினின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.
அவரை விமர்சித்த எதிர்த்த புலம்பெயர் அமைப்புகளே வாழ்த்துக்களை அனுப்பு
கின்ற அளவுக்கு நிலைமைகளில் மாற்றங்கள் தென்படுகின்றன.
ஸ்டாலின் தமிழகத்தை தாண்டியும் மதிக்கப்படும் ஒரு தலைவராக மாறிக்.
கொண்டிருக்கிறார். உலகத் தமிழர்களின் தலைவர் என்ற இலக்கை அடைவது
அவரது இலட்சியமாக இருக்கலாம்.
அவ்வாறான இலட்சியத்தை அவர் இலக்கு வைத்திருந்தால், அது கூட,
இலங்கைத் தமிழர் பிரச்சினையில், புதிய திருப்பமாக இருக்கும்.
இவ்வாறானதொரு நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, இந்தியாவின் புலனாய்வு நிறுவனங்களில் ஒன்றான தேசிய விசாரணைப் பிரிவு (118) ஏழு இலங்கையர்களுக்கு எதிராக சட்டவிரோத செயற்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்
சாட்டுக்களைப் பதிவு செய்திருக்கிறது.
இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழக முதல்வருக்கும் இடையில் உளப்பூர்வ
மான நெருக்கம் அதிகரித்து வருகின்ற சூழலில், இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த வழக்கிற்கும் பாகிஸ்தானுக்கும் முடிச்சுப் போடப்பட்டிருக்கிறது. அத்துடன் விடுதலைப் புலிகளின் மீள்எழுச்சியுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்றும். செய்திகள் கசியவிடப்படுகின்றன.
அண்மைக்காலமாக இந்தியாவில் விடுதலைப் புலிகள் அல்லது ஆயுதக் குழுக்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக் கின்றதை அவதானிக்கலாம்.
இவை எல்லாமே உண்மையானவை அடிப்படை உள்ளவை என்றில்லை.
சில நாட்களுக்கு முன்னதாக, இந்தியஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இலங்கையில் இருந்து இரண்டு படகுகளில் 12 தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறார்கள் என்றும், புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், இதனால் கேரள, கர்நாடக மாநில கரையோரங்களில் பாதுகாப்பு
அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.
ஆனால், மங்களூரு நகர பொலிஸ் ஆணையர் சசிகுமார் கடந்த செவ்வாய்க்
கிழமை இந்த தகவல்களை அடியோடு மறுத்திருக்கிறார்.
அவ்வாறான எந்த புலனாய்வு தகவலும் தங்களுக்கு வழங்கப்படவில்லை
என்றும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகளில் எந்த
உண்மையும் கிடையாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இது நேரடியாக தமிழகத்துடன் தொடர்புடைய செய்தியாக இல்லாவிட்டாலும்,
அண்மைக்காலமாக கேரளா, கர்நாடகா, தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்க
ளையும் இணைத்த பல செயற்பாடுகள், என்.ஐ.ஏ. இன் விசாரணை வளையத்தில்
இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அவற்றில் ஒன்று, மங்களூருவில், 38 பேரும், மதுரையில் 28 பேருமாக 61 இலங்கைத் தமிழர்கள் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட சம்பவம். இவர்கள் சட்டவிரோதமாக இந்தியா
வுக்குள் நுழைந்து, கனடாவுக்கு கப்பல். மூலம் செல்வதற்காக காத்திருந்தவர்கள்
என்று கூறப்பட்டது.
இவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளதா.
என்ற கோணத்திலும், இந்த ஆட்கடத்தல் வலையமைப்பின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்தும், என்.ஐ.ஏ.விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
இன்னொன்று, கடந்த மார்ச் மாதம்,18ஆம் திகதி கேரள மாநிலத்தை ஒட்டிய
அரபிக் கடல் பகுதியில் இலங்கை மீன் பிடிப்படகு ஒன்றை இந்திய கடலோரக் காவல்படை கைப்பற்றிய சம்பவம். குறித்தும் என்.ஐ.ஏ. விசாரித்துக் கொண்டிருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் இலங்கைப் படகில் இருந்து 3000 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அத்துடன் அந்தப் படகில் ஐந்து ஏ.கே.47 துப்பாக்கிகளும், ஆயிரம்
ரவைகளும் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தப் படகில் இருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டு, ஆயுத தடுப்புச் சட்டத்தின்
கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
நந்தன, ஜனக டயஸ் பிரிய, மென்டிஸ் குணசேகர, நமேஸ், திலங்க மதுஷான், நிசங்க என,
கைது செய்யப்பட்ட அனைவருமே சிங்களவர்கள்.
படகில் இருந்த போதைப்பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டது என்றும், இந்தியாவில் குழப்பங்களை ஏற்ப. டுத்துவதற்காகவே ஆயுதங்கள் கொண்டு.
வரப்பட்டன என்றும் ஆரம்பத்தில் கூறப்பட்.டது.
ஆனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கை கையில் எடுத்துக்:
கொண்ட என்.ஐ.ஏ, கேரளாவிலும், தமிழகத்திலும் பல இடங்களில் சோதனைகளை முன்ணெடுத்திருந்தது.
இதன்போது திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு அருகே வசித்து வந்த சுரேஸ்
ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இப்போது, படகில் கைது செய்யப்பட்டவர்களுடன் திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்டவரையும் சேர்த்து, ஏழு பேருக்கும் எதி.ராகவே, சட்டவிரோத செயற்பாடுகள் தடுப்புசட்டத்தின் கீழ் என்.ஐ.ஏ குற்றச்சாட்டுகளை
பதிவு செய்திருக்கிறது.
‘இதன்படி, போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல்களுடன் பாகிஸ்தானுக்கு
நேரடித் தொடர்பு உள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியுடன் இதற்கு தொடர்
புகள் இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், இந்திய ஊடகங்
களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
‘இங்கு விடுதலைப் புலிகளின் மீள் எழுச்’ சிக்கு உதவினார்கள் என்று இந்திய ஊடகங்
களால் சுட்டிக்காட்டப்படும் ஆறு பேரும் தமிழர்கள் இல்லை, சிங்களவர்கள் என்பது
தான் விந்தையான விடயம்.
எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் மீள்எழுச்சி பெற முயல்கிறார்கள், அதற்காக
அவர்கள் போதைப்பொருள் கடத்தல், சட்ட விரோத நிதிப் பரிமாற்றங்களில் ஈடுபடுகிறார்கள்,
இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்தும் சக்திகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள், குறிப்பாக இந்தியாவின் எதிரியான பாகிஸ்தானுடன் நெருங்கிய தொடர்பில் இரு,க்கிறார்கள் என்றெல்லாம், நாசூக்காக செய்திகள் பரப்பப்படுகின்றன.
பாகிஸ்தான் இந்தியாவின் எதிரியாக இருந்:தாலும், இலங்கையின் மிகநெருங்கிய, நம்
பகமான நட்பு நாடு என்பதையும், புலிகளை அழிப்பதற்கு உதவிய முக்கியமான நாடு என்
பதையும் இந்திய ஊடகங்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
இந்தச் செய்திகள் வெறுமனே ஊடக ‘வலையமைப்புகளால் உருவாக்கப்படுகின்றன. என்றில்லை.
இந்தியாவின் என்.ஐ.ஏ.என்ற புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்துள்ள
வழக்கின் அடிப்படையில் தான், இந்த தக.வல்கள் வெளியாகியிருக்கின்றன.
அவ்வாறாயின், என்.ஐ.ஏ., புலிகள் விவகாரத்தை விசாரணை என்ற அடிப்படை இலக்
கைத் தாண்டி, அரசியல் நோக்கங்களுக்காகவும் கையாள முற்படுகிறதா என்ற சந்தேகங்
கள் உள்ளன.
இந்திய புலனாய்வு அமைப்புகள், அரசியல் தேவைகள், நோக்கங்களை அடைவதற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த காலத்தில் இருந்தே, பா.ஜ.க. அரசு அதனைக்.
கடுப்புடன் தான் பார்த்து வருகிறது.
1990இல் கருணாநிதி அரசை கலைக்கச் செய்தது போன்று, ஸ்டாலின் அரசையும்
கவிழ்ப்பேன் என்று, சில மாதங்களுக்கு முன்:னர், பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியன் சுவாமி,
ஒரு சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதாவது தி.மு.க. அரசைக் கவிழ்ப்பது,என்பது பா.ஜ.க. அரசின் நிகழ்ச்சி நிரல்களில்
ஒன்றாகவே இருக்கிறது. இவ்வாறான நிலையில், ஏழு தமிழர்களின் விடுதலை, இலங்கைத்
தமிழர்களுக்குகுடியுரிமை, உள்ளிட்டவிவகார:ங்களில் மாநில அரசின் நெருக்கடிகளை
குறைக்கவும், ஸ்டாலின் அரசின் செல்வாக்கை வீழ்த்தவும், மீண்டும் புலிகள் எழுச்சி
என்ற நாடகத்தை அரங்கேற்ற புதுடெல்லி தயாராகிறதா என்ற கேள்விகளும் உள்ளன.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்.பற்றியதுமே, விடுதலைப் புலிகளுடன் முடி
ச்சுப் போட்டு, அவர்கள் மீண்டும் வலுப்பெறுவார்களா என்ற வாதப்பிரதிவாதங்கள் முன்
வெடுக்கப் பட்டன.
இவ்வாறான சூழலில், தமிழக அரசியலின் தேவைகளைக் கருத்தில் கொண்டு கூட,
விடுதலைப் புலிகள் விவகாரம் ஊடகங்களில். முதன்மைபடுத்தப்பட்டிருக்கலாம்.
எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட சிங்களவர்களின் துணையுடன், புலிகளின் மீள்
எழுச்சியைத் தொடர்புபடுத்தும் அளவுக்கா இந்திய புலனாய்வுத் தரப்புகள் வறுமை.
நிலையில் இருக்கின்றன?
-என்.கண்ணன்-
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-05#page-1