ஜனாதிபதியினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருந்த அவசரகால சட்ட விதிமுறைகள் பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்படுவதை தடுத்து, அவற்றின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 30 ஆம் திகதி அவசரகால விதிமுறைகள் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டிருந்தது.
அது தொடர்பான விவாதம் இன்று காலை முதல் பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், அதனை தொடர்ந்து மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது அவசரகால சட்ட விதிமுறைகளுக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 81 மேலதிக வாக்குகளால் அந்த சட்டம் நிறைவேறியுள்ளது.