ilakkiyainfo

கழுத்தில் தவளை மாலையுடன் சிறுமிகள் நிர்வாண ஊர்வலம்

மத்திய பிரதேசம் மாநிலம் புதல்கண்ட் பகுதியில் மழை வேண்டி கிராம மக்கள் சிறுமிகளை நிர்வாணமாக நடக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமோ மாவட்டத்தில் உள்ள கிராமமொன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது. அந்தப்பகுதி வறட்சியாக இருப்பதால் மழை பெய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் சடங்கு ஒன்றை நடத்த முடிவு செய்தனர்.

அதற்காக சிறுமிகளை நிர்வாணமாக்கி அவர்கள் கழுத்தில் தவளையை மாலையாக கட்டிவிட்டு ஊர்வலம் அழைத்துச் சென்றனர். சிறுமிகள் முன்னால் செல்ல அந்த ஊர் பெண்களும் பாடல் பாடியபடி அவர்களை பின் தொடர்கிறார்கள்.

10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை இந்த சடங்கிற்காக பயன்படுத்தியுள்ளனர். இந்த சடங்கின் மூலம் மழைக் கடவுள் சமாதானமடைந்து மழை தருவார் என ஊர் மக்கள் நம்புகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி கண்டனத்தை பெற்றுள்ளது.

இது குறித்து போலீசார் மற்றும் குழந்தை உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த சடங்கிற்கு சிறுமிகளின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளது. இந்த நிகழ்வு குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை. ஆனாலும் சிறுமிகளை கட்டாயப்படுத்தியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version