திருமண விழாவில் புகைப் படக்கலைஞர் ஒருவர் தான் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் மணமக்கள் கண்முன்னே அழித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
தனது திருமணத்தில் போட்டோஷூட் செய்வதற்கான பணத்தை மிச்சப்படுத்த நினைத்த நபரொருவர் தனது நண்பரையே திருமணத்திற்கான புகைப்படக் கலைஞராக அமர்த்தியுள்ளார்.
அந்த நபரும் மணமகன் தனது நண்பன் என்பதால் குறைந்த பணத்தில் புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும் திருமணத்தன்று காலை 11 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை அவருக்கு உணவு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கடும் கோபமடைந்த அந்த போட்டோகிராபர் மணமக்கள் கண்முன்னேயே திருமண நிகழ்வில் எடுத்த அனைத்துப் படங்களையும் அழித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ” புகைப்படம் எடுப்பதற்காக என்னை உணவருந்த விடவில்லை. தொடர்ந்து படமெடுத்துக் கொண்டிருந்ததால் நான் மிகவும் சோர்வடைந்தேன்.
இதனால் எனக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. அதனால் தான் அனைத்துப் புகைப்படங்களையும் அழித்து விட்டேன் என அந்நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.