2018 இல் லண்டனின் தொழிலாளர்கள் இந்துக்களின் செல்வத்திற்கான தெய்வமான லக்ஸ்மியின் படமொன்றை மிகவும் அவதானமாக சுவிட்சர்லாந்திற்கு செல்லவுள்ள வானில் ஏற்றினார்கள்.
ரவிவர்மாவின் 19ம் நூற்றாண்டின் அந்த கலைப்படைப்புநான்கு கைகள் ஆபரணங்கள் சிகப்பு சேலையில் அந்த கடவுளை சித்தரித்திருந்தது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவின் பீரீபோர்ட்டிற்கு அனுப்பப்படவிருந்த ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான 31 கலைப்படைப்புகளில் ஒன்று அது.
அது மிகவும் பாதுகாப்பான களஞ்சியசாலை,20 கால்பந்தாட்ட மைதானங்களை விட பெரியது- அங்கேயே அந்த நிறுவனம் தனது மிகப்பெரிய கலைப்படைப்புகளை பாதுகாப்பது சேமிப்பது வழமை-
உலகில் எவரும் காணமுடியாத கலைப்படைப்புகளை அங்கு காணமுடியும் என பிபிசி ஒருமுறை தெரிவித்திருந்தது.
லக்ஸ்மியின் படத்திற்கும் அனுப்பப்படும் கலைப்படைப்புகளிற்கும் உரிமையாளர் சமோவாவில் பதியப்பட்ட பசுபிக் கொமாடிட்டீஸ் லிமிடட் என்ற ஷெல் நிறுவனம் என பொதியிடல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் சிங்கப்பூரை சேர்ந்த நிதிச்சேவை வழங்குனரான ரோம் ஆசியா சிட்டி டிரஸட் மூம் கசிந்த பல ஆவணங்கள் இலங்கையின் அரசியல் ரீதியில் தொடர்புள்ள திருக்குமார் நடேசன் இந்த நிறுவனத்தை இரகசியமாக கையாள்கின்றார் என்பதும் அவரே அந்த 31 கலைப்படைப்புகளின் உரிமையாளர் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளன.
அவரது மனைவி நிருபாமா ராஜபக்ச இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இலங்கையின் அரசியலில் ஒரு தசாப்தகாலத்திற்கு மேல் ஆதிக்கம் செலுத்தியுள்ள அதிகாரம் மிக்க ராஜபக்ச குடும்ப வாரிசு.
ஐசிஐஜேயினால் பெறப்பட்ட நம்பகதன்மை மிக்க ஆவணங்கள் நாடு இரத்தக்களரி மிக்க உள்நாட்டு போரினால் சீரழிந்துகொண்டிருந்த தருணத்தில் தம்பதியினர் அநாமதேய கடல்கடந்த அறக்கட்டளைகள் ஷெல் நிறுவனஙகளை கலைப்படைப்புகள் ஆடம்பர குடியிருப்புகளை பெறுவதற்காகவும் பணங்கள் இரகசிய சொத்துக்களை இரகசியமாக சேமிப்பதற்கும் உருவாக்கினார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
நடேசன் இலங்கை அதிகாரிகளால் நன்கு அறியப்பட்ட ஊழலிற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரும், அவரது சொத்துக்கள் குறித்து கேள்விகள் எவற்றையும் கேட்காத நிதிச்சேவை வழங்குநர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் பிற தொழில் வல்லுனர்களின் உதவியுடன் அவர்கள் தங்கள் செல்வத்தை குவித்து அவற்றை இரகசிய நியாயாதிக்கங்களில் மறைத்து வைத்தனர்.
முன்னர் ஒருபோதும் பகிரங்கப்படுத்தப்படாத ராஜபக்ச நடேசனின் கடல்கடந்த நிறுவனங்களின் சொத்து 18 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது என்பது ஐசிஐஜே நடேசனின் சொத்துக்களை ஆராய்ந்தவேளை தெரியவந்துள்ளது.
இலங்கையை சேர்ந்த ஒருவரின் சராசரி வருடாந்த வருமானம் 4000 டொலருக்கும் குறைவு.
நடேசனின் நீண்டகால ஆலோசகரான ஏசியாசிட்டிக்கான மின்னஞ்சல்களின் மூலம் 2011 இல் அவரது ஒட்டுமொத்த சொத்து 160 மில்லியன் டொலராக காணப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
ஏசியாசிட்டி மற்றும் ஏனைய கடல்கடந்த சேவைழங்குநர்களிடமிருந்து ஐசிஐஜே பெற்றுக்கொண்டு சர்வதேசஊடக சகாக்களிற்கு பரிமாறிய 11.9 மில்லியன் ஆவணங்களில் நடேசன் மற்றும் நிருபாமாவின் நிதிச்செயற்பாடுகள் குறித்து தகவலை வழங்கும் ஆவணங்களும் காணப்படுகின்றன.
பன்டோரா பேப்பருக்காக மேற்கொள்ளப்பட்ட இரண்டுவருட விசாரணைகளின் போது வறிய மற்றும் ஏதேச்சாதிகார நாடுகளில் இருந்து ஷெல் மற்றும் அறக்கட்டளை நிறுவனங்களின் பெயரில் காணப்படும் தனியார் வங்கிக் கணக்குகளிற்கு பில்லியன் கணக்கான பணம் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இவை அனேகமாக நீதிமன்றங்கள் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவிவிட்டு இடம்பெற்றுள்ளன.
உலகநாடுகள் அவசியமான வளங்களிற்காக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன,உலகின் வளம் குறிப்பிட்ட சிலரின் கரங்களில் காணப்படுகின்றது.
இலங்கையில் செல்வந்தர்களிற்கும் வறியவர்களிற்கும் இடையிலான இடைவெளி மேலும் அதிகரித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வரிச்சலுகைகள் செல்வந்தர்களிற்கும் அதிகாரமிக்கவர்களிற்குமான வரமாக காணப்படுகின்றது,
நாட்டின் ஏனைய பகுதி இன்னமும் உள்நாட்போரின் தாக்கங்களில் இருந்து மீண்டவண்ணமுள்ளது.
அந்தபகுதிகளில் பாடசாலைகள் சுகாதாரம் சமூக திட்டங்களில் முதலீடு செய்வதற்கு போதுமான நிதியில்லாத நிலை காணப்படுகின்றது.