வல்லிபுர ஆழ்வார் கோவில், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் ஆகியவற்றுக்குள், சப்பாத்துடன் சென்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கொட்டாச்சி என்பவரே, இவ்வாறு மத நியதிகளை மீறி, கோவில்களுக்குள் சப்பாத்துடன் சென்றுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு, இன்று (13) நண்பகல் வருகை தந்துள்ள பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, வல்லிபுர ஆழ்வார் கோவில், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் ஆகியவற்றுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், கோவில் வெளி வீதியில் சப்பாத்துகளை கழற்றிவிட்டு, கோவில்களுக்குள் சென்று வழிபாடுகளை முன்னெடுத்த நிலையில், காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாத்திரம் சப்பாத்துகளை கழற்றாது, கோவில்களுக்குள் சென்றுள்ளார்.