Site icon ilakkiyainfo

ஓடையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

நாவலப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடியன்லேன பகுதியில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (14) மாலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் மூன்று பிள்ளைகளின் தாயான ஜே.பிலோமீனா (73) எனவும் இவர் குயின்ஸ்பேரி தோட்டத்தை சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவரது மரணம் கொலையா,தற்கொலையா,அல்லது விபத்தா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version