கேரளாவில் பலத்த மழையை அடுத்து வீதிகளில் வௌ்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் ஆலப்புழையைச் சேர்ந்த மணமகன் ஆகாஷ் – மணமகள் ஐஸ்வர்யா ஆகியோர் தமக்காக நிர்ணயிக்கப்பட்ட திருமணத் திகதி, நேரத்தை இழக்க விரும்பாததால் பாரிய சமையல் பாத்திரம் ஒன்றை ஏற்பாடு செய்து அருகிலுள்ள ஆலயத்துக்குச் செல்கின்றனர்.