கொழும்பு தொட்டலங்க பகுதியில் இரு சடலங்கள் இன்று கண்டுபிடிக்கப்பட்டன.
ஒரு சடலம் தொட்டலங்க சேதவத்த கறுத்த பாலம் அருகே ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இது பெண்ணொருவரின் சடலம் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு முதல் குறித்த சடலம் அவ்விடத்தில் காணப்பட்டுள்ளது. கிராண்ட்பாஸ் பொலிஸார் இன்று காலை ஸ்தலத்துக்குச் சென்று சடலம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்தனர்.
மற்றுமொரு ஆணின் சடலம் இன்று காலை தொட்டலங்க விக்டோரியா பாலமருகே கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த சடலங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.