ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
மேலும் பல்வேறு நாடுகளும் வர்த்தக ரீதியிலான உறவைக் கடைபிடிக்கத் தயங்கி வருவதால் அங்கு தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகள் நீடித்து வருவதாகவும் இதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருவதாகவும், வறுமையின் காரணமாக சிலர் தங்கள் குழந்தைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் தமது பருவ வயதுப் பெண் பிள்ளைகளை வயது முதிர்ந்த ஆண்களுக்கு பணத்திற்காக பெற்றோர்கள் திருமணம் செய்து கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.