பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் COP26 காலநிலை மாநாட்டில் உலக நாடுகள் அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் காப்பாற்றப்பட்டால், புவியின் வெப்பநிலை அதிகரிப்பை தொழிற்புரட்சி காலத்திற்கு முன்பு இருந்த சராசரி வெப்பநிலையை விடவும், கூடுதலாக 1. 8 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று சர்வதேச ஆற்றல் முகமை தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் ஐந்தாம் நாளான இன்று 190 நாடுகள் மற்றும் அமைப்புகள் புதைபடிம எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ள நிலையில் இதை அந்த அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.
நிலக்கரி உள்ளிட்ட புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல், நிகர கார்பன் உமிழ்வை பூஜ்ஜியம் அளவுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை இந்த மாநாட்டின்போது உலக நாடுகள் அளித்துள்ளன.