எகிப்தில் நபர் ஒருவர் திருமணமாகி ஒரே மாதத்தில் தனது மனைவியை விவாகரத்துச் செய்துள்ள விநோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் தமது மனைவியை பேஸ் புக் மூலம் சந்தித்ததாகவும், பின்னர் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் திருமணத்திற்குப் பின்பு தான், மனைவியின் உண்மையான முகத்தைப் பார்த்ததாகவும், முக ஒப்பனையில்லாத மனைவியின் முகத்தைப் பார்த்து தான் அதிர்ச்சியடைந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ”தனது மனைவி தன்னை ஏமாற்றிட்டதாகக் கூறி” குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கொன்றையும் அவர் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது