கொக்குவில் – கேணியடிப் பகுதியில், நேற்று (06) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில், இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில், குறித்த பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ரதீபன் என்ற இளைஞனே, இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த 3 பேர், இவ்விளைஞன் மீது வாள்வெட்டை நடத்திவிட்டு, அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.