ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, June 28
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உள்நாட்டு செய்திகள்»ராஜபக்ஷவினரின் காலடியில் விழுந்து பேச்சுவார்த்தை நடத்த ஒருபோதும் தயாரில்லை : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பதிலடி
    உள்நாட்டு செய்திகள்

    ராஜபக்ஷவினரின் காலடியில் விழுந்து பேச்சுவார்த்தை நடத்த ஒருபோதும் தயாரில்லை : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பதிலடி

    AdminBy AdminNovember 15, 2021No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளை தீர்க்கவும், சுய உரிமையையும், கௌரவத்தையும் சுயாட்சியையும் உறுதிப்படுத்தும் இதய சுத்தியுடனான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்றால் அவ்வாறான பேச்சுவார்த்தைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதுமே தயாராக உள்ளது,

    ஆனால் தமிழ் மக்களின் சுய கௌரவத்தையும், உரிமைகளையும் விற்று, அரசாங்கத்தின் காலடியில் விழுந்து ராஜபக்ஷவினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற தேவை எமக்கு ஒருபோதும் இல்லை.

    அதற்கு நாம் தயாராகவும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

    சனிக்கிழமை (13)  அரசாங்கத்தின் 2022 ஆம்  ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார, தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

     

    தனது உரையில் அவர் கூறுகையில்,

    தமிழ் தேசிய கூட்டமைப்பு நாட்டுக்கு அவசியமான பல நல்ல விடயங்களை கூறுகின்றனர், ஆனால் அவர்கள் தமிழ் மக்களின் நலன்களில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பை நிராகரிக்க மாட்டார்.

    இன்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் எம்.பி, சுரேன் ராகவன் எம்.பி ஆகியோர் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகின்றனர்.

    தமிழ் தேசிய கூட்டமைப்பை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ளவோ அல்லது அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக இணையவோ நாம் வலியுறுத்தவில்லை.

    நீங்கள் அரசாங்கத்தில் இணையாவிட்டாலும் பரவாயில்லை, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும். எனவே பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என  ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

    இது குறித்து தமது நிலைப்பாட்டை முன்வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கூறுகையில்,

    தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளவும், நீண்டகால அரசியல் நெருக்கடிகள், உரிமை மீறல்கள் என்பவற்றிற்கு ஒரு தீர்வு கிடைக்கவும், சுய கௌரவத்தை உறுதிப்படுத்திக்கொள்ளவும், வடக்கு கிழக்கிற்கான அபிவிருத்திகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடர்ச்சியாக சகல  தரப்புடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

    அழுத்தம் கொடுக்க வேண்டிய இடங்களில் அதனையும் செய்து வருகின்றோம். அதேபோல், நாங்கள் இப்போதும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே உள்ளோம்.

    ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் பேச மாட்டோம் என நாம் ஒருபோதும் கூறவில்லை. தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் அவருடன் நாம் 13 தடவைகள் பேச்சுவர்த்தை நடத்தியுள்ளோம். ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. வெறுமென கண்துடைப்பு பேச்சுவார்த்தைகளாகவே இவை அமைந்தன.

    2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், பொறுப்புக்கூறல் விடயங்களில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சர்வதேசம் அழுத்தம் கொடுத்த நிலையில், அரசாங்கத்தை பொறுப்புக்கூறலுக்குள் தள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பாக நாம் எடுத்த நகர்வுகளில் எம்மை சமாளிக்கும் விதமாக இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

    இப்போது ராஜபக்ஷவினரின் அரசாங்கத்தில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, அங்கஜன் போன்றவர்கள் அங்கம் வகிப்பது மற்றும் பதவிகளை வகிப்பது குறித்தும் நாம் விமர்சிக்கவில்லை.

    ஆனால் தமிழ் மக்களின் சுய கௌரவத்தையும், உரிமைகளையும் விற்று, அரசாங்கத்தின் காலடியில் விழுந்து ராஜபக்ஷவினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற தேவை எமக்கு ஒருபோதும் இல்லை.

    எம்மை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள், முதலில் எமது பிரச்சினை என்ன, எமக்கு அநீதி இழைக்கப்பட்டமை குறித்தும் முழுத் தெளிவுடன் கருத்துக்களை முன்வைக்க வேண்டுமென  கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

    Post Views: 177

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    எரிபொருள் பெற்றவர்கள் கடமைக்கு செல்ல வேண்டும்

    June 27, 2022

    வவுனியாவில் பதுக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லீற்றர் டீசல் மீட்பு

    June 27, 2022

    யாழ் : விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியைத் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 59 வயது நபர் கைது

    June 27, 2022

    Leave A Reply Cancel Reply

    November 2021
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « Oct   Dec »
    Advertisement
    Latest News

    நகர்ப்புற பாடசாலைகளுக்கு பூட்டு ; சுயமாக முடங்கும் நிலையில் நாடு !

    June 27, 2022

    அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் – விசேட அறிவிப்பு

    June 27, 2022

    படகு மூலம் தனுஷ்கோடி சென்ற மன்னாரைச் சேர்ந்த வயோதிப தம்பதிகளின் நிலை கவலைக்கிடம்

    June 27, 2022

    கர்நாடக கஜானாவில் ஜெயலலிதாவின் பொருட்கள்: 11,344 புடவைகள், தங்கம், வைர நகைகள் என்ன ஆகும்?

    June 27, 2022

    மின் கட்டணத்தை 82%ஆல் அதிகரிக்குமாறு கோரிக்கை

    June 27, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • நகர்ப்புற பாடசாலைகளுக்கு பூட்டு ; சுயமாக முடங்கும் நிலையில் நாடு !
    • அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் – விசேட அறிவிப்பு
    • படகு மூலம் தனுஷ்கோடி சென்ற மன்னாரைச் சேர்ந்த வயோதிப தம்பதிகளின் நிலை கவலைக்கிடம்
    • கர்நாடக கஜானாவில் ஜெயலலிதாவின் பொருட்கள்: 11,344 புடவைகள், தங்கம், வைர நகைகள் என்ன ஆகும்?
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version