கர்நாடக மாநிலம் பந்திப்பூர் தேசிய வன உயிரியல் பூங்கா அருகே யானை ஒன்று, இரும்பு வேலியை தாண்டி செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஓம்கார மலைத்தொடரில் உள்ள ரயில்வே பாதையில் பொதுமக்கள் செல்லாமல் இருக்க ரயில்வே துறையினர், ரெயில்வே கேட்டிற்கு அருகே இரும்பு வேலி அமைத்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு வனப்பகுதியில் இருந்து வந்த யானை ஒன்று, சாதூர்யமாக இரும்பு வேலியை தாண்டி சென்றது. இதனை வன உயிரியல் பூங்கா ஊழியர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
ரயில் விபத்தை தடுக்க அமைக்கப்பட்ட வேலியை தாண்டி விளையாடும் காட்டு யானை#Elephant #Karnataka pic.twitter.com/haBhjuValx
— Thanthi TV (@ThanthiTV) November 17, 2021