நவம்பர் மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் 19 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம், ஜேர்மன் ஆகிய நாடுகளிலிருந்தே அதில் பெரும்பாலானவர்கள் வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பயணத் தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் எண் ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் எனவும் அந்த அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது