ரெட் அலர்ட் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிக கனமழை பெய்து வருவதால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. தூத்துக்குடியை தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
ரெட் அலர்ட் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.