Site icon ilakkiyainfo

15 வயது சிறுமியை 7 மாத கர்ப்பிணியாக்கிய சகோரியின் கணவர்

அம்பாறை திருக்கோலில் பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை 7 மாத கர்ப்பிணியாக்கிய சகோரியின் கணவர் தலைமறைவாகியுள்ளதுடன் சிறுமியின் தாயார் மற்றும் சிறுமியின் சகோதரியை நேற்று (22) கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தெரிவித்தார்.

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் உள்ள 15 வயது சிறுமி தாய் மற்றும் திருமணம் முடித்த சகோதரியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான தாயின் சகோதரியின் கணவன் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நிலையில் சிறுமி 7 மாத கர்ப்பணியாகியுள்ளார்.

இதனையடுத்து இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சிறுவர் பிரிவு பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுமியின் சகோரியின் கணவர் தலைமறைவாகியதை அடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதனையடுத்து தலைமறைவாகிய நபரை பொலிஸார் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள உடந்தையாக இருந்த சிறுமியின் 54 வயதுடைய தாயார் மற்றும் சிறுமியின் 24 சகோதரி ஆகிய இருவரையும் நேற்று பொலிஸார் கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைமறைவாகியுள்ள நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தெரிவித்தார்.

Exit mobile version