ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, May 23
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»உள்நாட்டு செய்திகள்»சஹ்ரானினால் மேலும் சில குண்டு வெடிப்புக்கள் – வௌியான ஆதாரம்!
    உள்நாட்டு செய்திகள்

    சஹ்ரானினால் மேலும் சில குண்டு வெடிப்புக்கள் – வௌியான ஆதாரம்!

    adminBy adminDecember 4, 2021No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    2018 பெப்ரவரி 6, 12, 2018 ஆகஸ்ட் மாதம் 26, மற்றும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய திகதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

    2018-02-06 ஆம் திகதி பள்ளிவீதி புதிய காத்தான்குடி என்ற விலாசத்தை​ சேர்ந்த அப்துல் மொஹமட் பர்ஹான் என்ற நபரின் வீட்டின் மீதும் மற்றும் 2018-02-12 ஆம் திகதி சி.பி காசிம் வீதி, காத்தான்குடி 01 பகுதியில் அமைந்திருந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சிக் காரியாலயம் மீதும் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரினால் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டு மட்டக்களப்பு நீதிமன்றில் சமர்ப்பணங்கள் அறிக்கையிடப்பட்டிருந்தது.

    இந்த சம்பவங்கள் தொடர்பில் மட்டக்களப்பு குற்றவியல் விசாரணை அதிகாரிகளினால் சம்பவ இடங்களில் இருந்து வெடிகுண்டுப் பாகங்கள் உள்ளிட்ட வழக்கு பொருட்கள் கைப்பற்றப்பட்டு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதன்படி, 2018.12.04 திகதியன்று அரச இரசாயன பகுப்பாய்வாளரால் அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் குறித்த வழக்குப் பொருட்கள் நேர வெடிகுண்டுகளின் பாகங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேற்குறிப்பிட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களின் வழக்குப் பொருட்களுடன் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் வழக்குப் பொருட்கள் தொடர்பு பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இது தெரியவந்துள்ளது.

    அதேபோல், இந்தியாவில் கைது செய்யப்பட்ட எஸ்.சம்சுதீன் என்ற இந்திய பிரஜையின் கைப்பேசியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட முஜஹிதீன் போ அல்லா என்ற வட்ஸ் எப் கணக்குடன் தொடர்புபட்டுள்ள இலங்கையை சேர்ந்த 702 தொலைப்பேசி இலக்கங்கள் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரின் (TID) விரிவான விசாரணையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரித்ததில் மேற்குறிப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளை சஹ்ரானின் குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்தியது தெரியவந்துள்ளதாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் 2021.12.02 ஆம் திகதி மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் மேலதிக அறிக்கையின் ஊடாக சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனது.

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆழமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்குப் பொருட்கள் ஒப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Post Views: 133

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin

    Related Posts

    பஸ் யன்னலில் வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்த 3 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்!

    May 21, 2022

    கொழும்பில் பயங்கரம் – கர்ப்பிணியை கத்தியால் குத்தி வயிற்றிலிருந்த குழந்தையை கொன்ற கணவர்

    May 21, 2022

    ரயிலுடன் வேன் மோதி விபத்து: நால்வர் காயம்

    May 21, 2022

    Leave A Reply Cancel Reply

    December 2021
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Nov   Jan »
    Advertisement
    Latest News

    வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு

    May 23, 2022

    எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்

    May 23, 2022

    மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த நபரொருவர் தற்கொலை

    May 23, 2022

    இலங்கை நெருக்கடி: இந்தியா இதுவரை இலங்கைக்காக செய்த உதவித் திட்டங்கள் – ஒரு பார்வை

    May 23, 2022

    சுறாக்களின் யுத்தத்தில் சிறுமீன்களின் தத்தளிப்பு

    May 22, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் மணமக்கள் உருவம் பொறித்த சிறுமுகை பட்டு
    • எரிபொருள் கிடைக்காமையால் பறிபோனது 2 நாட்களேயான சிசுவின் உயிர்
    • மட்டு போதனா வைத்தியாலை விடுதியில் தங்கி சிகிச்பெற்றுவந்த நபரொருவர் தற்கொலை
    • இலங்கை நெருக்கடி: இந்தியா இதுவரை இலங்கைக்காக செய்த உதவித் திட்டங்கள் – ஒரு பார்வை
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version