Site icon ilakkiyainfo

உமையாள்புரம் பகுதியில் வெடிப்பு விபத்து ; உயிரிழந்தவரின் சடலத்தை பரிசோதனையின் பின் ஒப்படைக்க உத்தரவு

கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் மர்மப்பொருள் ஒன்றை பரிசோதித்தபோது அது வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 13 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் இன்று (05-12-2021 ) பிற்பகல் 3-30 மணியளவில் மர்மப் பொருள் ஒன்றை கிரைண்டர் ஒன்றினால் வெட்டியபோது குறித்த பொருள் வெடித்ததில் ஒருவர் உடல் சிதறி பலியாகியுள்ளதுடன் சம்பவத்தில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தின் போது( சிவலிங்கம் யுவராஜ் வயது- 25) உயிரிழந்துள்ளதுடன் சிவலிங்கம் நிலக்சன் என்ற சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டை சூழவுள்ள வீட்டின் சில பகுதிகளிலும் ஆபத்தான வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ள மை இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version