ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, February 7
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    இலங்கை செய்திகள்

    கஞ்சா சாகுபடியை அனுமதித்து இலங்கையில் சட்டமியற்ற முயற்சி: ‘போதை பொருளா மூலிகையா’ என விவாதம்

    AdminBy AdminDecember 10, 2021No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கஞ்சா ஏற்றுமதி செய்யும் வகையில், கஞ்சா செய்கையை (சாகுபடியை) முன்னெடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக வகுத்து, அதனை சட்டமாக்குமாறு இலங்கை நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

    ஐக்கிய மக்கள் சக்தி மூலமாக நாடாளுமன்றத்துக்கு தேர்வாகி, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

    இவ்வாறு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனையை, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார சபையில் வழிமொழிந்தார்.

    உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் கஞ்சா சாகுபடி ஊடாக, பாரிய இலாபத்தை பெற்று வருவதாகவும் டயானா கமகே நாடாளுமன்றத்தில் கூறினார்.

    எதிர்கட்சிகளின் நிலைபாடு

    கஞ்சா ஏற்றுமதிக்கான பயிர் செய்கையை மேற்கொள்வது சட்டமாக்கப்படுகின்றமை தொடர்பில் விரிவான கலந்துரையாடலொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதான எதிர்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி கோருகின்றது.

    ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் காவிந்த ஜயவர்தன பிபிசி தமிழிடம் இதனைக் குறிபிட்டார். கஞ்சா மருத்துவ குணம் கொண்டுள்ளதல், அதன் பயன்பாட்டு தன்மை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

    இந்த விடயம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே, அது தொடர்பில் விளக்கமளிக்க முடியும் என அவர் கூறுகின்றார்.

    கஞ்சா ஏற்றுமதி சட்டமாக்குவதற்கு எதிர்ப்பு

    இலங்கையில் கஞ்சா சாகுபடியை அனுமதித்து சட்டமியற்றுவதன் மூலமாக, சமூக சீர்கேடுகள் அதிகரிக்கும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிகழ்ச்சி அதிகாரி நிதர்ஷனா செல்லதுரை தெரிவிக்கிறார்.

    இலங்கையில் கஞ்சா தற்போது தடை செய்யப்பட்ட ஒன்று என்ற போதிலும், நாட்டிற்குள் இன்றும் கஞ்சா பயன்பாடு காணப்படுவதாக அவர் கூறுகின்றார்;.

    இந்த நிலையில், கஞ்சா சாகுபடியை அனுமதித்து சட்டமாக்கும் பட்சத்தில், அது நாட்டிற்குள் மேலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சாத்தியம் உள்ளது. ஏற்றுமதிக்காக என கூறி அதற்கான அனுமதி வழங்கப்பட்டாலும், உள்நாட்டிலும் பயன்பாடு இருக்கும் என அவர் குறிப்பிடுகிறார்.

    கஞ்சா ஏற்றுமதிக்கு மாத்திரம் அனுமதி தற்போது கோரப்பட்டாலும், எதிர்காலத்தில் உள்நாட்டு பயன்பாட்டிற்கும் அனுமதி கோரப்படும் சாத்தியம் உள்ளது.

    இதனால், கஞ்சாவை சட்டமாக்குவதற்கு எதிராக நடவடிக்கைகளை தாம் எடுத்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

    இலங்கையில் கஞ்சாவை தாண்டி, ஏற்றுமதிக்கான பல்வேறு பயிர் செய்கைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

    டயானா கமகே போன்ற சிலர், ஏனைய பயிர் செய்கைகளுக்கு முன்;னுரிமை வழங்காது, ஏன் கஞ்சாவிற்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குகின்றனர் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.

    கஞ்சாவினால் ஏற்படும் சமூக பாதிப்பு

    கஞ்சா பயன்படுத்தும் போது அது உடல், உள ரீதியிலான பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும் என நிதர்ஷனா செல்லதுரை தெரிவிக்கின்றார். அத்துடன், பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.

    கஞ்சா பயிர் செய்கை செய்யப்பட்ட நிலத்தில், வேறொரு பயிர் செய்கையை செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. கஞ்சா பயன்படுத்துவோரின் குடும்பங்களில், குடும்ப தகராறு, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக வன்முறைகள் ஏற்படும்.

    டயானா கமகேயின் பதில்

    கஞ்சா என்பது போதைப்பொருள் கிடையாது என்பதுடன், கஞ்சா என்பது தலைசிறந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகை என நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவிக்கின்றார். பிபிசி தமிழுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

    உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் கஞ்சாவிற்கு அனுமதி வழங்கியுள்ளதுடன், பல நாடுகள் கஞ்சா செய்கை செய்து வருகின்றன. அத்துடன், பல நாடுகள் கஞ்சாவை ஏற்றுமதி செய்யும் அதேவேளை, மருந்து வகைகளுக்கும் கஞ்சாவை பயன்படுத்தி வருகின்றன.

    கஞ்சாவிற்கான கேள்வி, நாளுக்கு நாள் அதிகரிக்கும் என அவர் கூறுகின்றார். உலகில் நோய்கள் என்றுமே குறையாது எனவும், அதனால், மருத்துவ குணம் கொண்ட இவ்வாறான மூலிகைகள் அத்தியாவசியமானவை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

    எதிர்வரும் காலப் பகுதியில் பில்லியன் கணக்கான பணத்தை ஈட்டித் தரக்கூடிய ஒரு ஏற்றுமதி பயிர் செய்கை கஞ்சா என அவர் கூறுகின்றார். நாடு இன்று பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்து யோசிக்க வேண்டும்.

    கஞ்சாவை போதைப்பொருளாக உள்நாட்டில் பயன்படுத்த மாட்டார்கள் என்பதில் எவ்வாறு உறுதியளிக்க முடியும் என டயானா கமகேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. கஞ்சா என்பது போதைப்பொருள் கிடையாது என அவர் பதிலளித்தார்.

    இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய போதைப்பொருள் கிடையாது என்பதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறுகின்றார். நாட்டில் தற்போது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய, செய்கை முறையிலான கேரளா கஞ்சா பயன்படுத்தப்படுகிறது. அதுவே பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

    கஞ்சா என்பது இலங்கையின் கலாசாரத்துடன் இணைந்த ஒன்று என டயானா கமகே தெரிவிக்கின்றார். கஞ்சா செய்கையின் ஊடாக நாட்டிற்கு பாரிய தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்த முடியும், கஞ்சாவின் ஊடாக பெரும்பாலான முக்கிய பொருட்களை தயாரிக்க முடியும். அழகு சாதன பொருட்கள், மருத்துவ வகைள் என பல்வேறு பொருட்களை தயாரிக்க முடியும் என டயானா கமகே தெரிவிக்கிறார்.

    இலங்கையின் பொருளாதாரத்தை போதைப்பொருள் விற்பனையின் ஊடாகவா கட்டியெழுப்ப முடியும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, கஞ்சா என்பது மூலிகை எனவும், அது போதைப்பொருள் கிடையாது எனவும் அவர் பதிலளித்தார்.

    சட்ட மூலம் தயாரிப்பு

    நாடாளுமன்றத்தில் கஞ்சாவை ஏற்றுமதிக்காக பயிர் செய்வதற்கான சட்டத்தை தயாரிக்க அனுமதி கிடைத்துள்ள நிலையில், சட்ட மாஅதிபர் திணைக்களம், நீதி அமைச்சு, ஆயுர்வேத திணைக்களம் இணைந்து சட்ட மூலத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.

    இவ்வாறு தயாரிக்கப்படும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, சட்டமாக்கப்படும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிடுகின்றது.

    Post Views: 210

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    யாழில் மோட்டார் சைக்கிள் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்து ; ஒருவர் பலி

    February 6, 2023

    நிலக்கரி கொள்வனவுக்கு ரூ.456 கோடி தேவை

    February 5, 2023

    கோடீஸ்வரர் கொலை: கந்தானையில் ஒருவர் கைது

    February 5, 2023

    Leave A Reply Cancel Reply

    December 2021
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Nov   Jan »
    Advertisement
    Latest News

    ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!

    February 7, 2023

    பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!

    February 7, 2023

    தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்

    February 6, 2023

    சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!

    February 6, 2023

    துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!

    February 6, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!
    • பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!
    • தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்
    • சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version