நபர் ஒருவர் ஒரே நாளில் 10 முறை கொரோனாத் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட சம்பவம் நியூசிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் 24 மணி நேரத்தில் வெவ்வேறு நபர்களின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி 10 முறை கொரோனாத் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் ஏன் இவ்வாறு செய்தார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
இது குறித்து அந்நாட்டு கொவிட் -19 தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு திட்டத்தின் குழு மேலாளர் ஆஸ்ட்ரிட் கோர்னிஃப், கருத்துத் தெரிவிக்கையில் ” நாங்கள் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இதுபோன்ற ஏராளமான தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் விளைவு குறித்த தரவுகள்எதுவும் தற்போது இல்லை.
அதனால், ஒரு நாளைக்கு 10 டோஸ்களை எடுத்துக் கொள்ளும் ஒருவருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என சொல்வது மிகவும் கடினம். ஆனால் அவ்வாறு எடுத்துக் கொள்வது நிச்சயம் பாதுகாப்பானது அல்ல. எனவே இவ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது” என்றார்.