ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, June 28
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»இலங்கை செய்திகள்»
    இலங்கை செய்திகள்

    AdminBy AdminDecember 24, 2021No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    விபத்துக்கான காரணம் குறித்து காங்கயம் டி.எஸ்.பி., குமரேசன், சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காங்கயம்:

    சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்தவர்கள் பிரபு (வயது 23), செந்தில் (24), அறிவழகன் (25). பழனி கோவிலுக்கு மாலை அணிந்திருந்த இவர்கள் 3 பேரும் அவர்களது நண்பர்களான கந்தசாமி, சபரிராஜா, ஜெகன், கோகுலகிருஷ்ணன் வடிவேல் ஆகியோருடன் பழனிக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு நேற்றிரவு காரில் சேலத்திற்கு புறப்பட்டனர். காரை அறிவழகன் ஓட்டினார்.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் போலீஸ் நிலையம் அருகே வந்தபோது அந்த வழியாக ஈரோட்டில் இருந்து காங்கயம் வழியாக பழனிக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும், காரும் நேருக்குநேர் மோதின. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதில் 7 பேரும் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடினர்.


    விபத்துக்குள்ளான கார்-அரசு பஸ்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு காங்கேயம் போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் அனைவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது பிரபு, செந்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. இதையடுத்து மற்ற 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அறிவழகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    வடிவேல் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவருக்கு கால் முறிந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து காங்கயம் டி.எஸ்.பி., குமரேசன், சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்து நிகழ்ந்ததும் பஸ் டிரைவர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்தில் பலியான பிரபு சேலம் அரசு கல்லூரியில் எம்.ஏ., 2-ம் ஆண்டும், செந்தில் என்ஜினீயரிங் கல்லூரியிலும் படித்து வந்தனர்.

    மேலும் செந்திலுக்கு திருமணமாகி மோனிஷா என்ற மனைவியும், 6 மாத கைக்குழந்தையும் உள்ளது. அறிவழகன் கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். பழனி கோவிலுக்கு சென்று விட்டு வந்த போது 3 பேர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Post Views: 318

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    நகர்ப்புற பாடசாலைகளுக்கு பூட்டு ; சுயமாக முடங்கும் நிலையில் நாடு !

    June 27, 2022

    மின் கட்டணத்தை 82%ஆல் அதிகரிக்குமாறு கோரிக்கை

    June 27, 2022

    ஜனாதிபதியை சந்தித்தனர் அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திர குழுவினர்

    June 27, 2022

    Leave A Reply Cancel Reply

    December 2021
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    « Nov   Jan »
    Advertisement
    Latest News

    நகர்ப்புற பாடசாலைகளுக்கு பூட்டு ; சுயமாக முடங்கும் நிலையில் நாடு !

    June 27, 2022

    அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் – விசேட அறிவிப்பு

    June 27, 2022

    படகு மூலம் தனுஷ்கோடி சென்ற மன்னாரைச் சேர்ந்த வயோதிப தம்பதிகளின் நிலை கவலைக்கிடம்

    June 27, 2022

    கர்நாடக கஜானாவில் ஜெயலலிதாவின் பொருட்கள்: 11,344 புடவைகள், தங்கம், வைர நகைகள் என்ன ஆகும்?

    June 27, 2022

    மின் கட்டணத்தை 82%ஆல் அதிகரிக்குமாறு கோரிக்கை

    June 27, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • நகர்ப்புற பாடசாலைகளுக்கு பூட்டு ; சுயமாக முடங்கும் நிலையில் நாடு !
    • அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் – விசேட அறிவிப்பு
    • படகு மூலம் தனுஷ்கோடி சென்ற மன்னாரைச் சேர்ந்த வயோதிப தம்பதிகளின் நிலை கவலைக்கிடம்
    • கர்நாடக கஜானாவில் ஜெயலலிதாவின் பொருட்கள்: 11,344 புடவைகள், தங்கம், வைர நகைகள் என்ன ஆகும்?
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version