நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பீட்று தோட்ட பிரிவான சின்னகாடு தோட்டத்தில் சனிக்கிழமை காலை தனி வீட்டிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான காளிமுத்து சண்முகம் தர்மராஜ் (வயது 46) சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இவரின் விசாரணையின்போது அவரது மனைவி, “என் கணவருக்கும் எனக்கும் குடும்ப தகராறு இருந்தது இந்த தகராறு சண்டையாக மாறியது இதன்போது அவர் என்னை அடித்தார் பதிலுக்கு நானும் அவரை தடியால் அவரின் தலையில் அடித்தேன். சாக வேண்டும் என அடிக்கவில்லை சேர். இவருடைய தலையிலிருந்தும்,காதிலிருந்தும் இரத்தம் வருவதை கண்டேன் அவர் மயங்கி கீழே விழுந்தார் நான் பயந்து பிள்ளைகளை கூட்டிக்கிட்டு வீடு மூடிவிட்டு ஓடிவிட்டேன்.” என தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த தர்மராஜாவின் பிரேத பரிசோதணை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் (26) மாலை இடம்பெற்றது.
நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவானி ருவான் குணசேகரவின் பணிப்புக்கு அமைய சட்ட வைத்தியர் பி.டி.ராஜகுரு பிரேத பரிசோதணையை நடத்தினார்.
இதன்போது தலையில் கட்டையால் தாக்கப்பட்டும், கைகளில் தாக்கப்பட்டும் அதிகளவன இரத்தம் வெளியாகிய நிலையில் உயிரிழப்பு சம்பவித்துள்ளதாக தனது அறிக்கையில் சட்டவைத்தியர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் சம்பவம் குறித்த மரண விசாரணையை, மரண விசாரணை அதிகாரி மற்றும் வைத்தியசாலை பொலிஸார் முன்னெடுத்தனர்.
இதன்போது தனது கணவரை தான் கட்டையால் தாக்கியதாகவும், சாக வேண்டுமென தான் தாக்கவில்லை என்றும் உயிரிழந்தவரின் மனைவி சுப்பிரமணியம் சசிக்கலா (வயது 43) தனது வாக்குமூலத்தில் உண்மையை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சடலம் பிரேத பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்ட பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது சடலத்தை அடக்கம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை நுவரெலியா மாவட்ட நீதவான் பிறப்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியான சுப்பிரமணியம் சசிக்கலாவை நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிசார் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தடுத்து வைத்துள்ளனர். இவரை நாளை (27) திங்கட்கிழமை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.