தோப்பூர் நல்லூர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய பொடி அப்புக்காமி விஜயதாச என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த மூன்று தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில் நல்லூர் ஆற்றங்கரை வீதியில் அமைந்துள்ள பழைய வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் சம்பூர் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சடலத்தை மீட்ட பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்